மேலும் படகில் இருந்த கண்ணன், மணி, ரஜினி, பிரசாந்த், சீலன், ராஜா, சுசித், மெக்கன்ஸ் உள்பட 25 மீனவர்களையும் சிறை பிடித்து, அங்கேயே விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. விசாரணைக்கு பின் மீனவர்கள் அனைவரும் கைப்பற்றப்பட்ட 3 விசைப்படகுகளுடன் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் சில படகுகளும் கடற்படையினரிடம் சிக்கி உள்ளதாகவும் மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 10 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற நிலையில் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டது ராமேஸ்வரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேர் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.