அதன்படி கிருபாகரனும் தனது செல்போனுக்கு வந்த ஓடிபி நம்பரை கூறியுள்ளார். சிறிது நேரத்தில் கிருபாகரனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1,25,074 எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கிருபாகரன், ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்ததை அறிந்தார். இதுதொடர்பாக புழல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் மோசடி, தொழில்நுட்ப சட்டப்பிரிவு என இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். புழல் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post கிரெடிட் கார்டை செயலிழக்க வைப்பதாக ரூ.1.25 லட்சம் நூதன மோசடி: மர்ம கும்பலுக்கு வலை appeared first on Dinakaran.