அதைத்தொடர்ந்து திருமுறை ஓதுவார்கள் திருமுறை பண் இசையுடன் மேலவீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி, கீழராஜ வீதிகள் வழியாக வந்தனர். அப்போது யானை மீது திருமுறை பெட்டி வைத்து எடுத்து வரப்பட்டது. இந்த ஊர்வலம் மீண்டும் கோயிலை வந்தடைந்தது. பின்னர் காலை 9 மணியளவில் பெரிய கோயிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு தருமபுரம் ஆதினம் தலைமையில் இளநீர், சந்தனம், பால் உள்ளிட்ட 48 வகை திரவியங்களால் பேரபிஷேகம் செய்யப்பட்டன. பிற்பகல் 1.30 மணியளவில் பெரிய பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post தஞ்சையில் 1038வது சதய விழா கோலாகலம் ராஜராஜ சோழனுக்கு அரசு சார்பில் மரியாதை: பெருவுடையாருக்கு 48 வகை திரவியங்களால் பேரபிஷேகம் appeared first on Dinakaran.