பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்!

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் 116வது ஆண்டு ஜெயந்தி விழா, 61வது ஆண்டு குருபூஜை விழா, வருகிற அக் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பால்குடம், முளைப்பாரி, காவடி, வேல் மற்றும் ஜோதியை எடுத்து தேவர் நினைவிடத்தில் செலுத்தியும், வணங்கியும் செல்வர். அன்றைய தினம் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவர்.

அந்த வகையில், பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.இதற்காக சென்னையில் இருந்து 29-ந் தேதி விமானம் மூலம் மதுரை சென்றடைகிறார். 30-ந்தேதி காலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.பின்னர் சாலை மார்க்கமாக பசும்பொன் கிராமம் சென்று முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்துகிறார். அவருடன் தமிழக அமைச்சர்களும் மரியாதை செலுத்துகின்றனர்.முதலமைச்சரின் பசும்பொன் பயணத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

The post பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்! appeared first on Dinakaran.

Related Stories: