காரில் இருந்த 700 கிலோ ரேஷன் அரிசியையும், வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் கன்னங்குறிச்சியை சேர்ந்த கண்ணன்(31), அவரது சகோதரர் ரத்தினவேல்(33) என்பதும், கன்னங்குறிச்சி பகுதியில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி மாடு வைத்திருப்பவர்களுக்கு அதிக விலைக்கு விற்க கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post காரில் கடத்திய 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: சேலத்தில் 2 பேர் கைது appeared first on Dinakaran.
