இதனைத்தொடர்ந்து, காலை 10 மணியளவில் 3ம் கால யாகசாலை பூஜை முடிந்தபின் மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் சிவாச்சாரியார்கள், புனித நீர் கொண்டு வந்து கலசங்களின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், ஆனைப்பள்ளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். பின்னர், கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்காக ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
The post ஆனைப்பள்ளம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.