முத்துப்பேட்டை அருகே மாவட்ட போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு

 

முத்துப்பேட்டை, அக். 20: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் நாச்சி குளம் மில்லெனியம் பள்ளி மாணவர்கள் திருவாரூரில் பள்ளி கல்வி துறை சார்பில் நடந்த போட்டிகளில் பங்கேற்றனர். இதில் சாலை மிதிவண்டி போட்டியில் மாணவர் நித்திஷ் மாவட்ட அளவில் முதலிடமும், முகம்மது ராசித் மற்றும் பைரவநாதன் ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர். இதேபோல நீச்சல் போட்டியில் இருப்பிரிவுகளில் மாணவி விவினியா இரண்டாமிடமும், மாணவர் ஆதிசக்தி மூன்றாமிடமும் பெற்றனர்.

விளையாட்டு போட்டியி்ல் மாவட்ட அளவில் முதலிடம் மற்றும் 2 வது இடம் பெற்ற 2 மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு ஜனவரி மாதம் செல்ல உள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களையும், இதுக்கு காரணமாக இருந்த ஆசிரியயை சீதாலெட்சுமிக்கும், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர்களும் பாராட்டு தெரிவித்தனர்.

The post முத்துப்பேட்டை அருகே மாவட்ட போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: