இந்த நிலையில் நேற்று இரவு காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவர்கள், நோயாளிகள் என 500 பேர் வரை கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது. தெற்கு காசாவில் உள்ள ரபாவில் 27 பேரும், கான் யூனிஸ் நகரத்தில் 30 பேரும் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே ராக்கெட் தாக்குதலுக்கு உள்ளான காசா மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் காயம் அடைந்தவர்கள், மற்ற மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சர்வதேச போர் சட்டங்களை மீறி இஸ்ரேல் ராணுவம், பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்து வருவதாக கூறியுள்ள ஹமாஸ் அமைப்பு, காசாவில் மட்டும் இதுவரை 3,000த்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.இதனிடையே மருத்துவமனை மீது தங்கள் ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் மறுப்பு தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவிய ராக்கெட் தவறுதலாக மருத்துவமனை மீது விழுந்ததை தங்கள் பாதுகாப்புத் துறை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்.. அப்பாவி மக்கள் 500 பேர் பலி; பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்வதாக ஹமாஸ் தாக்கு! appeared first on Dinakaran.
