இது குறித்து கம்பீர் கூறியதாவது: முன்பு பாகிஸ்தான் அணி நம் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், கடந்த பல வருடங்களாக, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி அமர்க்களமாக விளையாடி ஆதிக்கம் செலுத்துகிறது. இது துணைக்கண்ட அளவில் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்றே கருதுகிறேன். இந்த அணிகளிடையே இரு தரப்பு தொடர் நடந்தால், அது ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருக்கும் என்று சொல்லுவோம். இனி அப்படி இருக்காது என்பது சமீபத்திய போட்டிகளில் இருந்து தெளிவாகிவிட்டது. திறன் அடிப்படையில் இரு அணிகளுக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது’ என்றார்.
The post இந்திய அணி ஆதிக்கம் நல்லதல்ல! கம்பீர் கருத்து appeared first on Dinakaran.