ஆயுத பூஜை, விஜய தசமி விடுமுறையையொட்டி 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: கும்பகோணம் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தஞ்சை: ஆயுத பூஜை, விஜய தசமி விடுமுறையையொட்டி 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என கும்பகோணம் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. வரும் 21-24 வரை திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு 300 பேருந்துகள் இயக்கப்படும். இதேபோல் வரும் 20-22 வரை திருச்சியில் இருந்து கோவை, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. வரும் 24, 25ல் சென்னையில் இருந்து 300, மற்ற வழித்தடங்களில் இருந்து 200 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post ஆயுத பூஜை, விஜய தசமி விடுமுறையையொட்டி 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: கும்பகோணம் போக்குவரத்து கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: