ஜாம்புவானோடை பள்ளியில் முப்பெரும் விழா கொண்டாட்டம்

 

முத்துப்பேட்டை, அக்.17: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை ஓஎம்எ பள்ளியில் உலக உணவு தினம், வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம், உலக மாணவர் தினம் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. நிலா முற்றத்தின் தலைவர் கவிஞர் மாறன் கலந்து கொண்டு விவசாயியின் மகத்துவத்தையும், துரித உணவின் விளைவையும் பற்றி உரையாற்றினார். வீரபாண்டிய கட்டபொம்மனின் வசனத்தை மாணவர்கள் அழகாக நடித்துக் காட்டினர்.

உணவு தின விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து மாணவர்களுக்கும் சிறு தானிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி நிறுவனர் ஓவியச் செல்வன், துணை நிறுவனர் முத்துச்செல்வி, பள்ளியின் தாளாளரும் முதல்வருமான சுவாமிநாதன், துணை முதல்வர் தமிழ் இலக்கியா மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

The post ஜாம்புவானோடை பள்ளியில் முப்பெரும் விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: