அதிமுக 52வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி வருகிற 17ம் தேதி காலை 10.30 மணியளவில் சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி, கட்சி கொடி ஏற்றி வைத்து, இனிப்பு வழங்குகிறார்.
கடந்த 20.8.2023ல் மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டிற்கு வந்தபோதும், மாநாடு முடிந்து ஊர் திரும்பும்போதும் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடும்பநல நிதியுதவியும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவியும் அதிமுக சார்பில் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சிகளில் தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும்.
The post அதிமுக 52வது ஆண்டு தொடக்க விழாவில் ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி மாலை appeared first on Dinakaran.