இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து, குருபரப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று காரில் இருந்தவர்களை மீட்டனர். அப்போது சம்பவ இடத்திலேயே சந்தீப், அமான் ஆகியோர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. காயமடைந்த ரியாஸ், மித்துஜலால், கிருஷ்ணன் ஆகியோரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 2 உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய கார் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இந்த விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
The post கேரளாவில் இருந்து பெங்களூரு சென்றபோது டேங்கர் லாரி மீது கார் மோதி 2 வாலிபர்கள் பரிதாப பலி: நண்பர்கள் 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.