திருப்பதி கோயிலில் 6 மணிநேரத்தில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் 70 ஆயிரத்து 515 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 27 ஆயிரத்து 230 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. அதில், ரூ.4.23 கோடி காணிக்கையாக கிடைத்தது. நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 2 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 6 மணிநேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

The post திருப்பதி கோயிலில் 6 மணிநேரத்தில் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: