முத்தையாபுரம், முள்ளக்காடு பகுதிகளில் 10ம்தேதி மின்தடை

தூத்துக்குடி, அக்.7: தூத்துக்குடி முத்தையாபுரம், முள்ளக்காடு பகுதிகளில் வருகிற 10ம்தேதி மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி முத்தையாபுரம் உபமின் நிலைய செயற்பொறியாளர் சாமுவேல் சுந்தர்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம் முத்தையாபுரம் உபமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசரகால பராமரிப்பு பணிகளுக்காக வருகிற 10ம்தேதி செவ்வாய்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மின்தடை செய்யப்படும். இதன்படி முத்தையாபுரம், பாரதிநகர், அத்திமரபட்டி, அனல்மின் நகர் பகுதி, கேம்ப்-1ஐ சுற்றியுள்ள பகுதிகள், கேம்ப்-2 பகுதிகள், துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகள், தோப்புத்தெரு, வடக்குதெரு, முள்ளக்காடு, பொட்டல்காடு, அபிராமிநகர், சுனாமிநகர், சவேரியார்புரம், கால்டுவெல் காலனி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

The post முத்தையாபுரம், முள்ளக்காடு பகுதிகளில் 10ம்தேதி மின்தடை appeared first on Dinakaran.

Related Stories: