தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார். இது தொடர்பாக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X தள பதிவில்; தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சார்பாக கோவையில் அக்டோபர் 21, 22 ஆகிய தேதிகளில் சைக்கிளிங் போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியை நடத்த உதவிடும் வகையில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினோம். அதனைத் தொடர்ந்து, போட்டிக்கான கோப்பை மற்றும் டி – ஷர்ட்களையும் அறிமுகப்படுத்தி, போட்டியில் கலந்துகொள்ளவுள்ள வீரர்களை வாழ்த்தினோம் என்று பதிவிட்டுள்ளார்.

 

The post தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பாக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: