சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் ஒரு அறை முற்றிலும் சேதமானது. இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக ஆலையின் உரிமையாளர் ராஜேந்திர ராஜா, ஆலை போர்மேன் சக்கையா ஆகிய இருவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலை போர்மேன் சக்கையா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான உரிமையாளர் ராஜாவை போலீஸ் தேடி வருகிறது.
The post சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை தீ விபத்தில் 3 பேருக்கு பலத்த தீக்காயம்… 2 பேர் மீது வழக்குப்பதிவு; ஊழியர் கைது appeared first on Dinakaran.