காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் நின்று சரக்குகளை இறக்க வேண்டிய ரயில் சிக்னல் கோளாறால் நிற்காமல் தண்டவாளம் முடிந்த பகுதியை கடந்து தடுப்புகளை உடைத்துக்கொண்டு சுமார் 20 மீ தொலைவுக்கு வந்து சாலை பகுதியில் சுமார் 5 மீட்டர் தூர் வந்தது. இதன் காரணமாக, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூ வீலர்கள் ரயில் சக்கரத்தில் சிக்கி சேதமடைந்தன. அந்த ரயில் பாதை பயன்படுத்தாத பகுதி என்பதால் அருகில் வளர்ந்திருந்த ஒரு மரத்தின் மீது மோதி நின்றது. அதே நேரத்தில் அப்பகுதியில் தண்டவாளத்தின் அருகே அமர்ந்திருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சரக்கு ரயில் விபத்து தொடர்பாக, சிக்னல் கோளாறு காரணமா என்பது குறித்து ரயில்வே போலீசார், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்புப் பணிகள் 4 மணி நேரம் நடைபெறும் என்பதால், ரயில்வே கேட் மூடப்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
The post காஞ்சிபுரத்தில் தண்டவாளத்தை விட்டு விலகி சாலைக்கு வந்தது சரக்கு ரயில்: இருசக்கர வாகனங்களை மோதி தள்ளியது appeared first on Dinakaran.