ஆனால், அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் தொட்டியின் ஒருபக்க சுவர் சரிந்து விழுந்தது. மேலும் தொட்டியை சுற்றி செடி கொடிகள் வளர்ந்துள்ளதால் கொடிய விஷமுள்ள பூச்சிகள் பள்ளி வளாகத்தில் உலா வருகின்றன. இதனால், பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் விளையாட அஞ்சுகின்றனர். எனவே பள்ளி மாணவர்களை அச்சுறுத்தும் பழுதான குடிநீர் தொட்டியை உடனடியாக அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கயப்பாக்கம் பள்ளி அருகே இடிந்து விழும்நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி: அகற்ற பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.