இது குறித்து சுகாதார துறை அமைச்சகம் கூறுகையில்,‘‘இ சிகரெட் உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரம் ஆகியவற்றை தடை செய்வதற்காக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனவே இ-சிகரெட் 2019 சட்ட விதிகளை மீறாமல் நாட்டிற்குள் இ-சிகரெட் வைத்திருப்பது சாத்தியமில்லை. தனிநபர் இ சிகரெட் வைத்திருந்தால் சட்ட விதிகளை மீறுவதாக கருதப்படும். இது குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கும் விளக்கம் அனுப்பப்பட்டுள்ளது. இது தடையை அமல்படுத்துவதை மேலும் வலுப்படுத்தும்” என தெரிவித்துள்ளது.
The post இ-சிகரெட் வைத்திருப்பது சட்ட மீறல்: சுகாதார அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.