அதேபோல் நாடு முழுவதும் உள்ள மகாத்மா காந்தியின் சிலைகள் பூக்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, மகாத்மா காந்தியின் 154ஆவது பிறந்தநாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா தலைவர் ஓம் பிர்லா, டெல்லி கவர்னர் சக்சேனா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
The post மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாள் நாள்: நினைவிடத்தில் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மல்லிகார்ஜுன கார்கே மரியாதை appeared first on Dinakaran.