உத்திரமேரூர் வட்டாரம்தான் ஜனநாயக தேர்தல் அமைப்பு முறை பிறந்த தொட்டிலாக வரலாற்று ஆசிரியர்களால் சொல்லப்படுகிறது. ஜனநாயக முறையில் தேர்தல் நடந்ததை உத்திரமேரூர் கல்வெட்டுதான் கூறுகிறது. கிராம சபைகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 6 முறை கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற வேண்டும் மாற்றுத்திறனாளிகள் நலன், முதியோர் நலன் உள்ளிட்டவற்றில் கிராமசபை கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் சோழர் காலம் முதல் கிராம சபைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன; கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் தங்களின் தேவைகள் குறித்து விவாதிக்கின்றனர் இவ்வாறு கூறினார்.
The post மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள்தான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.