கோவை பீளமேட்டில் கட்டிட பணியின்போது உரிமையாளரின் ரூ.2 லட்சம் திருட்டு

 

கோவை, அக். 2: கோவை காளப்பட்டி சிவசுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் ஆஜிஸ்கான் (34). சொந்த தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார். இந்த கட்டுமான பணியில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கலீம், ஆரீப் ஆகியோர் தங்கி வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று கட்டிட பணியை பார்வையிட ஆஜிஸ்கான் சென்றார்.

பின்னர் அவர் தான் கட்டுமான பொருட்கள் வாங்குவதற்காக கொண்டு சென்ற ரூ.2 லட்சத்தை ஒரு பேக்கில் வைத்திருந்தார். அந்த பணத்தை மர்ம நபர் திருடி சென்றுவிட்டனர். அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த கலீம், ஆரிப்பையும் காணவில்லை. அவர்கள் திருடி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து ஆஜிஸ்கான் பீளமேடு போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

The post கோவை பீளமேட்டில் கட்டிட பணியின்போது உரிமையாளரின் ரூ.2 லட்சம் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: