மதுவிலக்கு அமலாக்கப்பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது

சென்னை: மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. கோ.சசாங்சாய், தென் சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் துணைக்கண்காணிப்பாளர் ப.காசிவிஸ்வநாதன், ஆவடி காவல் ஆணையரகம், செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் கா.மு.முனியசாமி, மதுரை மண்டலம், மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அ. பாண்டியன் மற்றும் ராணிப்பேட்டை காவல் நிலைய தலைமை காவலர் ஜெ.ரங்கநாதன்(அயல்பணி மத்திய நுண்ணறிவு பிரிவு) ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்விருதுகளை 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி குடியரசு தினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார். இவ்விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40,000 ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.

The post மதுவிலக்கு அமலாக்கப்பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது appeared first on Dinakaran.

Related Stories: