இதுகுறித்து ஸ்காட்லாந்து போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,‘‘ குருத்வாராவில் இடையூறு ஏற்பட்டதாக புகார் வந்தது. ஆனால் காயமடைந்தது குறித்து எந்த தகவலும் இல்லை. விசாரணை நடந்து வருகின்றது” என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில்,‘‘சீக்கிய குழுக்களை சந்தித்து தூதரகம் மற்றும் பிற விஷயங்களில் அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையில் குருத்வாரா கமிட்டியின் கோரிக்கையின்பேரில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ஒரு சில வெளியாட்கள் மற்றும் பிரிவினைவாத பிரிவுகளை சேர்ந்தவர்கள் இதற்கு இடையூறு ஏற்படுத்தினார்கள்” என தெரிவித்துள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியா-கனடா இடையே மோதல் மற்றும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இந்நிலையில் ஸ்காட்லாந்து குருத்வாராவிற்குள் இந்திய தூதரை நுழைய விடாமல் தடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post காலிஸ்தான் ஆதரவாளர்கள் அடாவடி ஸ்காட்லாந்து குருத்வாராவிற்குள் இந்திய தூதர் நுழைய தடை appeared first on Dinakaran.