மனசாட்சி இல்லாத தனி நபர்களாலும், தனியார் நிறுவனங்களாலும் கல்வி வணிக மயமாக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் வேதனை

சென்னை: மனசாட்சி இல்லாத தனி நபர்களாலும், தனியார் நிறுவனங்களாலும் கல்வி வணிக மயமாக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் வேதனை தெரிவித்துள்ளது. 2017-ல் நீட் எழுதி தேர்ச்சி பெற்ற புதுச்சேரியை சேர்ந்த சித்தார்த்தன் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. புதுவை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்தவில்லை என சேர்க்கை மறுப்பு தெரிவித்துள்ளது. கட்டாய பணி உ உத்தரவாதம் புரிவதாக உறுதியளிக்கவில்லை போன்ற உ காரணங்களை கூறி மாணவர் சேர்க்கை மறுப்பு தெரிவித்துள்ளது. ரூ.15 லட்சத்தை மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கலைமதி அமர்வு உத்தரவு அளித்துள்ளனர்.

The post மனசாட்சி இல்லாத தனி நபர்களாலும், தனியார் நிறுவனங்களாலும் கல்வி வணிக மயமாக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: