இந்நிலையில், காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம்; மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா சட்டமாகி விட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார். 2 தடை கற்களை வேண்டுமென்றே அதில் வைத்துள்ளதாகவும், அதனால் சட்டம் அமலுக்கு வர வாய்ப்பில்லை என்றும் அவர் கறாராக தெரிவித்துள்ளார். தேர்தல் வரும்போது கேஸ், பெட்ரோல் விலை மட்டுமல்ல தக்காளி, வெங்காயம் விலை கூட குறையலாம் என்று ஒன்றிய அரசின் அரசியல் நடவடிக்கைகளை சிதம்பரம் சாடியுள்ளார். ரூ.2,000 நோட்டை அச்சடித்து புழக்கத்தில் விட்டு விட்டு பின்னர் ரத்து செய்வது புத்திசாலிதனமான அரசு செய்யும் வேலை அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
The post மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் ஒரு மாயை.. 2029 தேர்தலிலும் கூட அமலுக்கு வராது… ப.சிதம்பரம் தாக்கு appeared first on Dinakaran.