பொன்னமராவதியில் தூய்மை சேவை விழிப்புணர்வு பேரணி

 

பொன்னமராவதி,செப்.30: பொன்னமராவதி அருகே கல்லம்பட்டியில் தூய்மை சேவை பணியின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஊராட்சி தலைவர் லெட்சுமி முத்துக்காளை தலைமையில் தூய்மை சேவைப்பணி நடைபெற்று வருகின்றது. இதன் மூலம் ஊராட்சியின் அனைத்து குக்கிராமங்களிலும் தூய்மை பணி நடைபெற்று வருகின்றது.

நேற்று தூய்மை சேவைப்பணியின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலர் கிருஷ்ணன், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள், மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதி திட்டப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதே போல பல்வேறு ஊராட்சிகளில் இந்த பணி நடைபெற்றது.

The post பொன்னமராவதியில் தூய்மை சேவை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: