தஞ்சாவூர், செப். 29: தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்திலிருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக விருதுநகர், பட்டுக்கோட்டைக்கு சரக்கு ரயில்களில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அனுப்பப்படும் நெல் அரவை செய்யப்பட்டு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் பிற இடங்களில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் நெல் அனுப்பப்படுகிறது.
அதன்படி நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் தஞ்சாவூர், கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன.
பின்னர் தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை, கும்பகோணத்தில் இருந்து விருதுநகருக்கு என தலா ஆயிரம் டன் நெல், தலா 21 ரயில் வேகன்களில் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
The post தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை, விருதுநகருக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு appeared first on Dinakaran.
