காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை

சென்னை: காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “காவிரி நதி நீர் பிரச்சனை சம்மந்தமாக பல்வேறு சமூக ஊடகங்களில் சிலர் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது பே போன்ற பழைய வீடியோக்கள் மற்றும் போஸ்டர்களை தற்போது நடந்தவை போல சித்தரித்து வதந்தி பரப்பி வருகிறார்கள்.

இத்தகைய வதந்திகள் மக்கள் மத்தியில் தவறான புரிதலை உண்டாக்கி அதன் விளைவாக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

இவ்வாறான வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. மேலும் பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தவறான தகவல்களை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: