ஆட்ட நேர முடிவில் இந்தியா 16-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. கேப்டன் ஹர்மன்பிரீத் 24, 39, 40, 42வது நிமிடங்களில் கிடைத்த 4 பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் கோலாக மாற்றினார். மன்தீப் சிங் 12, 30, 51வது நிமிடங்களில் ஃபீல்டு கோல் போட்டு ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். அபிஷேக், வருண் குமார் தலா 2 கோல், லலித்குமார், குர்ஜன் சிங், விவேக் பிரசாத், மன்பிரீத் சிங், ஷம்ஷேர் சிங் தலா 1 கோல் போட்டனர். சிங்கப்பூர் தரப்பில் ஜாகி ஜூல்கர்னயர் 53வது நிமிடத்தில் ஆறுதல் கோல் அடித்தார் (ஃபீல்டு கோல்). சிங்கப்பூர் தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 0-11 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்திருந்தது. இந்தியா தனது 3வது லீக் ஆட்டத்தில் நாளை ஜப்பான் அணியை எதிர்கொள்கிறது.
The post ஆசிய விளையாட்டு ஹாக்கி சிங்கப்பூரை சிதைத்தது இந்தியா: மீண்டும் 16 கோல் போட்டு மிரட்டல் appeared first on Dinakaran.