நேஹாவுக்கு வெள்ளி: பாய்மரப் படகு போட்டியின் மகளிர் டிங்கி ஐஎல்சிஏ-4 பிரிவில் நேற்று களமிறங்கிய இந்திய வீராங்கனை நேஹா தாகூர் (17 வயது), 2வது இடம் பிடித்து (நெட்:27 புள்ளி) வெள்ளிப் பதக்கத்தை முத்தமிட்டார். தாய்லாந்தின் நோப்பஸார்ன் குன்பூஞ்சன் (28 புள்ளி) தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
* ஆண்கள் பாய்மரப் படகு போட்டியின் ஆர்எஸ்: X பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் எபாத் அலி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.
* ஆண்கள் வாலிபால் போட்டியில் இந்திய அணிக்கு 6வது இடமே கிடைத்தது. 5வது இடத்துக்காக பாகிஸ்தானுடன் நேற்று மோதிய இந்தியா 21-25, 20-25, 23-25 என்ற நேர் செட்களில் போராடி தோற்றது.
* ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். 3வது சுற்றில் கஜகஸ்தானின் பெய்பிட் ஸுகயேவுடன் நேற்று மோதிய சுமித் 7-6 (11-9), 6-4 என்ற நேர் செட்களில் வென்றார்.
* கலப்பு இரட்டையர் டென்னிஸ் 2வது சுற்றில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா – யுகி பாம்ப்ரி இணை 6-0, 6-0 என்ற நேர் செட்களில் பாகிஸ்தானின் சாரா இப்ராகிம் – அகீல் கான் ஜோடியை மிக எளிதாக வீழ்த்தியது.
The post 41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் தங்கம்: இந்தியா அபார சாதனை appeared first on Dinakaran.