வரும் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம் முடிவு

சென்னை: வரும் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக 1,100 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவுப்‌ போக்குவரத்துக்‌ கழகம்‌ மேலாண்‌ இயக்குநர்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில், “வியாழக்கிழமை (25/06/2023) மிலாடி நபி, சனிக்கிழமை (29/09/2020) ஞாயிற்றுக்‌ கிழமை (01/40/2023) மற்றும்‌ 02/10/2023, அன்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை அரசு விடுமுறை தினம்‌ என்பதால்‌ ஐந்து நாட்கள்‌ விடுப்பு கிடைப்பதால்‌ பயணிகள்‌ சொந்த ஊர்களுக்கு சென்று வருவார்கள்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பயணிகள்‌ முன்பதிவும்‌ கூடுதலாகவே உள்ளது.

இதனால்‌ வெளி ஊர்களுக்கும்‌ மற்றும்‌ சுற்றுவா செல்ல திட்டமிடும்‌ பயணிகள்‌ தங்களுடைய தேவைகளுக்கு, ஏற்ப முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. இதன்படி முன்பதிவு செய்வதன்‌ மூலம்‌ பயணிகளின்‌ கூடுதல்‌ தேவையை அறிந்து அதற்கு ஏற்றவாறு கூடுதல்‌ பேருந்துகளை போக்குவரத்துக்‌ கழகங்கள்‌ இயக்க திட்டமிட வயலும்‌ மற்றும்‌ பயணிகள்‌ சிரமமின்றி பயணிக்கவும்‌ பாதுகாப்பாக திட்டமிட்டபடி பயணிக்கவும்‌ உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்‌ கொள்வதுடன்‌ ஆன்றைய தேதியில்‌ வெள்ளி, சனி, ஞாயிறு. மற்றும்‌ திங்கள்‌ கிழமை வரை பயணிகள்‌ அதிகளவில்‌ முண்பதிவு செய்துள்ளனர்‌. இதனை கருத்தில்‌ கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ கழகங்கள்‌ தினசரி இயக்கப்படும்‌ பேருந்துகளுடன்‌ கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும்‌, இந்நான்‌ வரை சென்னை மற்றும்‌ பல்வேறு ஒடங்களிலிருந்து பயணம்‌ மேற்கொள்ள 27/00/2023 அன்று 16,960 பயணிகளும்‌ 29/09/2028 அன்று 44,475 பயணிகளும்‌ மற்றும்‌ 03/10/2023 அன்று 7,919 பயணிகளும்‌ முன்பதிவு செய்துள்ளனர்‌ மற்றும்‌ பயணிகள்‌ எந்தவித சிரமமின்றி பயணம்‌ மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழகத்தின்‌ முக்கிய இடங்களுக்கு 27/09/2023 அன்று தினசரி, பக்க கூடிய பேருந்துகளுடன்‌ கூடுதலாக 250 பேருந்துகளும்‌ மற்றும்‌ 29/09/2023 அன்று 48௦ பேருந்துகளும்‌ பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம்‌ போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும்‌ மற்றும்‌ பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும்‌ 409 சிறப்பு பேருந்துகளும்‌ ஆக மொத்தம்‌ 1700 பேருந்துகள்‌ இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி ௦2/40/2023 அன்று திங்கட்கிழமை அன்று சொந்த ஊர்களில்‌ இருந்து சென்னை மற்றும்‌ பெங்களூர்‌ திரும்ப வசதியாக பயணிகளின்‌ தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும்‌ சிறப்பு பேருந்துகள்‌ இயககிட திட்டமிடப்பட்டுள்ளது. திங்கட்‌கிழமை பயணம்‌ மேற்கொள்வதற்கு இதுவரை 17,242 பயணிகள்‌ முண்பதிவு செய்துள்ளனர்‌. இந்த எண்ணிக்கை மேலும்‌ அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால்‌ தொலைதூர பயணம்‌ மேற்கொள்ள இருக்கும்‌ பயணிகள்‌ தங்களது பயணத்திற்கு மூலமும்‌ முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும்‌ போதிய அலுவலர்கள்‌ நியயிக்கப்பட்டுள்ளனர்‌. எனவே, பொதுமக்கள்‌ இவ்வசதியினை பயன்படுத்திக்‌ கொள்ளுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post வரும் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: