கல்வி கடன் வழங்க முன்வந்த வங்கிகள் தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை,செப்.26: தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்து செல்லும்திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடர 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

இதற்கு இணையான சான்றிதழ்கள்பெற நிலையான வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அகில இந்திய தொழிற் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக பள்ளி கல்வி துறையின்கீழ் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஐடிஐ தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய கல்வி சான்றிதழ்களை இணைத்து திருக்கோகர்ணம் பகுதியில் அமைந்துள்ள புதுக்கோட்டை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தினை ஆய்வு செய்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து தகுதிக்கேற்ப 10ம் வகுப்பு, 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற்று இத்துறையால் வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் உரியகல்விச்சான்றிதழ்களுடன் புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 3.10.2023 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த கவலை கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

The post கல்வி கடன் வழங்க முன்வந்த வங்கிகள் தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10, 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: