r 86.95லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் கண்காணிப்புக்குழு ஆய்வு கூட்டம்

கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பாக மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் மூன்றாம் காலாண்டு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களின் நிலுவையில் உள்ள வழக்குகளை உரிய காலத்திற்குள் விசாரணை மேற்கொண்டு, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வது, குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விரைந்து நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் நீதி பெற்றுத்தருமாறு அரசு சிறப்பு வழக்கறிஞருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் சண்முகவடிவேல், கோட்டாட்சியர் ரூபினா, துணை கண்காணிப்பாளர்கள் சரவணன், அண்ணாதுரை, அக்பர்கான், சிறப்பு அரசு வழக்கறிஞர் லட்சுமணன் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post r 86.95லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் கண்காணிப்புக்குழு ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: