ஆண்கள் பிரிவு அரையிறுதியில் கேரளாவை வீழ்த்தி பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணியும் பைனலுக்கு முன்னேறின. பைனலில் தமிழ்நாடு 17-16 என்ற புள்ளிக் கணக்கில் பஞ்சாப் அணியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. கேரளா 3வது இடம் பிடித்தது.
மகளிர் பிரிவு பைனலில் கேரளா 20-15 என்ற புள்ளிக் கணக்கில் டெல்லியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ரயில்வே 3வது இடம், தமிழ்நாடு 4ம் இடம் பிடித்தன. பட்டம் வென்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசாக தலா ₹3 லட்சம், கோப்பை வழங்கப்பட்டன. 2வது இடம் பிடித்த அணிகளுக்கு தலா ₹2 லட்சம், 3வது இடம் பிடித்த அணிகளுக்கு தலா ₹1 லட்சம் வழங்கப்பட்டது. கோப்பைகள் மற்றும் பரிசுகளை இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா, உயர்நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் பட், சிறப்பு விருந்தினர்கள் கரண் சிங், செல்வகணேஷ், குல்விந்தர் சிங் வழங்கினர்.
இந்த தொடரில் இரு பிரிவிலும் முதல் 7 இடங்களை பிடித்த அணிகள், அடுத்த மாத இறுதியில் கோவாவில் நடைபெற உள்ள 37வது தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ளன.
The post 3X3 கூடைப்பந்து போட்டி; தமிழ்நாடு சாம்பியன் appeared first on Dinakaran.