மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

 

ஊட்டி,செப்.26: நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனை பட்டா, சாலை, நடைபாதை வசதி, குடிநீர் வசதி, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 228 மனுக்கள் வரபெற்றன. அவற்றை பெற்று கொண்ட கலெக்டர் அருணா, இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் அடிப்படை வசதிகள் வேண்டி கோரும் மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். முதலமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அனைத்து அலுவலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனபிரியா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கல்பனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: