இந்நிலையில், நசரத்பேட்டை சிக்னல் அருகே சாலையை ஒருவர் திடீரென கடந்தார்.
இதைப் பார்த்த டிரைவர் மணி சட்டென்று பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், சாலையை கடந்தவர் மீது பேருந்து வேகமாக மோதி நின்றது. இதில், தூக்கி வீசப்பட்ட அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த விபத்தில் மாநகர பேருந்தில் டிரைவர் மணியின் அருகே அமர்ந்திருந்த கண்டக்டர் நிலைதடுமாறி, பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே விழுந்து படுகாயம் அடைந்தார். இதை பார்த்ததும், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் ஓடிவந்து கண்டக்டரை மீட்டு, பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இறந்துபோன நபரின் சடலத்தை கைப்பற்றி, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், மாநகர பேருந்து மோதியதில் இறந்த நபர் அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சின்னத்தம்பி (43) எனத் தெரியவந்தது. இவ்விபத்து குறித்து, டிரைவர் மணியிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
The post பூந்தமல்லி அருகே மாநகர பேருந்து மோதி கூலி தொழிலாளி பலி: நடத்துனர் படுகாயம் appeared first on Dinakaran.