லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றிபெற்ற தமிழ்நாடு ஆடவர் அணி இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோதியது. 10 நிமிடம் என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட போட்டியில் தமிழ்நாடு அணி 17-16 என்ற புள்ளிகணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. முன்னதாக நடைபெற்ற மகளிர் பிரிவு ஆட்டத்தில் 20-15 என்ற புள்ளி கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி கேரளா அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
The post இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அசத்தல்: தேசிய மூவர் கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் appeared first on Dinakaran.