சென்னை: சென்னை கத்திபாரா மேம்பாலம் அருகே 150 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. சென்னை புனித தொகையார் மலை பகுதியில் கத்திபாரா மேம்பாலம் அருகே அரசுக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலம் உள்ளது. இதனை ஆக்கிரமித்த தனியார் சிலர் கடைகள், குடோன்கள், கிளப் ஆகியவை நடத்தப்பட்டு வந்தன. இது தொடர்பாக வருவாய்த்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2006ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 16 ஆண்டுகள் கழித்து கடந்த 28ம் தேதி தீர்ப்பு வெளியானது.
அரசு நிலத்தை ஆக்கிரமித்த நபர்கள், அரசுக்கு ஒட்டுமொத்தமாக 35 கோடி செலுத்த வேண்டும் என்றும் நிலத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து காவல்துறை பாதுகாப்புடன் வருவாய்த்துறை அதிகாரிகள் 25க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்த ஆட்களை வெளியேற்றி கடைகளுக்கு சீல் வைத்தனர். தற்போது மீட்கப்பட்டுள்ள இடத்தின் மொத்த மதிப்பு 150 கோடி ரூபாய் ஆகும்.
The post சென்னை கத்திபாரா மேம்பாலம் அருகே ரூ.150 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு; அரசு நிலத்தில் இருந்த கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!! appeared first on Dinakaran.
