2-வது நாளான இன்று 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர். துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் ருத்ரன்ஷ் பாட்டீல், திவ்யன்ஷ் பன்வார் மற்றும் ஐஸ்வரி தோமர் அடங்கிய இந்திய ஆடவர் அணி மொத்தமாக 1893.7 புள்ளிகள் பெற்று இந்தியா தங்கத்தை வென்றது. அதுமட்டுமல்லாமல் இந்திய வீரர்களின் வெற்றி புதிய சாதனையாகவும் மாறியுள்ளது.
இதுவரை 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டிகளில் உலகா சாம்பியன்ஷிப் தொடரின் போது சீனாவின் 1893.3 புள்ளிகளே அதிக புள்ளிகள் என்ற சாதனையாக இருந்தது. அதனை இந்திய அணி வீரர்கள் 1893.7 புள்ளிகள் பெற்று சீனாவின் சாதனையை முறியடித்துள்ளனர். இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா முதல் தங்கத்தை வென்றுள்ளது.
The post ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கிச் சுடுதலில் தங்கம், வெண்கலத்தை கைப்பற்றிய இந்தியா; துடுப்பு படகு போட்டியிலும் வெண்கலத்தை வென்றது!! appeared first on Dinakaran.
