மலைச்சரிவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாறையில் மோதிய பேருந்து.. கோவில் திருவிழாவிற்காக சென்ற 46 பேர் படுகாயம்!!

அகமதாபாத் : குஜராத் மாநிலம் அம்பாஜி அருகே விபத்தில் சிக்கிய தனியார் சொகுசு பேருந்து கடுமையாக சேதம் அடைந்தது. பேருந்தில் சென்ற அனைவரும் படுகாயம் அடைந்தனர்.பனஸ்கந்தா மாவட்டம் அம்பாஜி நகரில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலில் வருடாந்திர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் கேதா மாவட்டத்தில் இருந்து 46 பேர் கொண்ட குழுவினர், தனியார் சொகுசு பேருந்தில் அம்பாஜி நோக்கி வந்தனர். அப்போது மலைச் சரிவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்தில் சிக்கியது.

பாறை ஒன்றில் பேருந்து மோதியதில் இருக்கைகளுக்கு மேல் இருந்த பகுதி முற்றலும் துண்டாகி தனியே விழுந்தது. இதில் பேருந்தில் சென்ற அனைவரும் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அம்பாஜி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post மலைச்சரிவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாறையில் மோதிய பேருந்து.. கோவில் திருவிழாவிற்காக சென்ற 46 பேர் படுகாயம்!! appeared first on Dinakaran.

Related Stories: