காஞ்சிபுரத்தில் புதிய மின் மாற்றிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்

 

காஞ்சிபுரம், செப்.25: காஞ்சிபுரம் மாநகராட்சியில் 2 புதிய மின் மாற்றிகளை, காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாநகராட்சியில் 26வது மற்றும் 45வது வார்டு பகுதியில், அவ்வப்போது குறைந்த மின் அழுத்தம் ஏற்படுவதால், சீரான மின்சாரம் பெற முடியாமல் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர். இதனையறிந்த, காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன், உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுருந்தார். இதனையடுத்து, காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 26வது வார்டு நசரத்பேட்டையில் உள்ள அண்ணா நகர் மற்றும் 45வது வார்டு வைகுந்தவள்ளி நகர் ஆகிய பகுதியில் 63 கிலோ வாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.

இதனை நேற்று காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன் மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். மேலும், பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்நிகழ்வில், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், பகுதி செயலாளர்கள் தசரதன், சந்துரு, திலகர், மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், கமலக்கண்ணன், மின் துறை அதிகாரி இளையராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரத்தில் புதிய மின் மாற்றிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: