இது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது உமிழப்பட்டுள்ள வெறுப்புரையாகும். ரமேஷ் பிதூரியின் வெறுப்பு பேச்சு பாஜவினரின் நாடி நரம்புகளில் இணைந்திருக்கும் முஸ்லிம் வெறுப்புணர்வின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது. நாடாளுமன்றத்திற்குள் இருக்கும் முஸ்லிம் எம்.பி.க்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பதை இந்த பேச்சு எடுத்து காட்டியுள்ளது. வெறுப்புணர்வை தூண்டும் எம்.பி மீது இது வரை பாஜ தலைமையோ, மக்களவை சபாநாயகரோ நடவடிக்கை எடுக்காததும் ஆச்சரியத்தை தரவில்லை.
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்திரி உள்ளிட்டோர் மீது பாய்ந்த நடவடிக்கை ரமேஷ் பிதூரி மீது ஏன் பாயவில்லை. புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் பாஜவினர் இனி எவ்வாறு தரம் தாழ்ந்து நடப்பார்கள் என்பதற்கு இது தொடக்கப்புள்ளியோ என்று எண்ண வேண்டியுள்ளது. ரமேஷ் பிதூரி மீது கடும் நடவடிக்கை எடுக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
The post எம்.பி ரமேஷ் பிதூரியின் பேச்சு பாஜவினரின் முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வின் வெளிப்பாடு: ஜவாஹிருல்லா எம்எல்ஏ கண்டனம் appeared first on Dinakaran.