இதனால் ஆத்திரமடைந்த வீரலட்சுமி மற்றும் அவருடன் வந்தவர்களுக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமரசம் செய்ய முயன்றனர். அப்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தகராறில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் வீரராகவர் கோயிலில் பரபரப்பு நிலவியது.
‘ஆம்பளைனா நேர்ல வா…’
சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த வீரலட்சுமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘‘விஜயலட்சுமி விவகாரத்தில் சீமான் சமரசம் பேசி, சகல வசதிகளை ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. கட்சியை கலைத்துவிட்டு வெட்டிப்போட்டு போய்க் கொண்டே இருப்பேன் என்று சீமான் சொல்லிவிட்டு போயிருக்கிறார். நான் எதற்கும் அஞ்சாதவள். நான் தனி ஆளாக வருகிறேன். ஆம்பளையா இருந்தா நேரில் வரவும். என்னை எதிர்த்தால் வட மாவட்டங்களில் ஒரு ஓட்டு கூட வாங்க முடியாது’’ என எச்சரித்தார்.
The post ‘இந்தா ஸ்கெட்ச்சு…’வீரலட்சுமியுடன் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதம்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.