அப்போது அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (24), குமரேசன் (40), சதீஷ் (26) ஆகிய 3 பேரும், திடீரென மாணவியை காரில் கடத்தினர். காரிலேயே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அலறி கூச்சலிட்ட மாணவியை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காரில் மாணவியை ைவத்து கொண்டு இரவு முழுவதும் சுற்றி துன்புறுத்தியுள்ளனர். மறுநாள் பள்ளூர் ரயில் நிலையம் அருகே காரில் இருந்து மாணவியை கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளனர். அங்கிருந்த மாணவி பஸ்சில் வீடு திரும்பினார். நடந்த சம்பவங்களை தனது தாயிடம் கூறி கதறினார்.இதுகுறித்து மாணவியின் தாய், நெமிலி போலீசில் நேற்று புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி 3 பேரை தேடினர்.
இந்நிலையில் சதீஷ் (24), மற்றொரு சதீஷ் (26) ஆகியோர் சென்னை சுங்குவார்சத்திரத்தில் உள்ள கம்பெனியில் வேலை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து நள்ளிரவில் அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, எஸ்ஐ சிரஞ்சீவிலு ஆகியோர், 2 பேரையும் பிடித்து அரக்கோணம் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவான குமரேசனை தேடி வருகின்றனர்.
The post நெமிலி அருகே கடைக்கு சென்ற மாணவியை காரில் கடத்தி பாலியல் தொல்லை; 2 வாலிபர் அதிரடி கைது appeared first on Dinakaran.