மேலகூட்டுடன்காட்டில் பதுக்கிய 650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடி, செப். 15: புதுக்கோட்டை அருகே பதுக்கி வைத்திருந்த 650 கிலோ ரேஷன் அரிசியை தாசில்தார் பறிமுதல் செய்தார். புதுக்கோட்டை அருகே உள்ள மேலகூட்டுடன்காடு பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் ஜான்சன் தேவசகாயத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தாசில்தார் ஜான்சன் தலைமையிலான அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் உள்ள 2 இடங்களில் மொத்தம் 13 மூட்டைகளில் சுமார் 650 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைத்தனர். மேலும் ரேஷன் அரிசி பதுக்கலில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மேலகூட்டுடன்காட்டில் பதுக்கிய 650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: