சர்வதேச ஓசோன் தினம் கடைபிடிப்பு

கிருஷ்ணகிரி, செப்.15: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் மற்றும் தேசிய பசுமைப்படை மன்றங்களின் சார்பில், சர்வதேச ஓசோன் தினம் கடைபிடிக்கப்பட்டது. உலக வெப்பமயமாதலை தடுக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும், ஓசோன் படலத்தை பாதுகாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பன்னாட்டு ஓசோன் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த மாவட்ட அளவிலான போட்டியில், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள், காற்று மாசுபடுவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 560 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி, பள்ளியின் தலைமை ஆசிரியரும், கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளருமான மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

The post சர்வதேச ஓசோன் தினம் கடைபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: