இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று உத்தரவிட்டார். அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, வழக்கை வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றியது உயர் நீதிமன்ற நிர்வாக உத்தரவு என்பதால், வழக்கில் உயர் நீதிமன்ற பதிவுத்துறையை சேர்த்து விளக்கத்தை கேட்டிருக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத் துறையின் விளக்கத்தையும் கேட்கவில்லை என்றார். இதையடுத்து, வழக்கு விசாரணையின் போது பதிவுத்துறை இணைக்கப்படும் என தெரிவித்த நீதிபதி, அமைச்சர் பொன்முடி வழக்கின் விசாரணையை அக்., 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலைக்கு எதிராக தானாக முன்வந்து எடுத்த வழக்கிலிருந்து விலக முடியாது: உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு appeared first on Dinakaran.