இந்தியா கூட்டணியை எவ்வாறேனும் பிளவுப்படுத்த வேண்டும், சிதறடித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பாஜக தலைவர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர், பெரும்பான்மை இந்து சமூகத்தை தங்களுக்கான வாக்கு வங்கியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், இந்து சமூகத்தினரின் உணர்வுகளையும், அவர்களின் நம்பிக்கைகளையும் தங்களுக்கான அரசியல் மூலதனமாக பார்க்கும் கட்சி பாஜக.
இந்துக்களுக்கு சமூக நீதியை வழங்குகிற, இதர அடிப்படை உரிமைகளை பாதுகாக்கின்ற காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் போன்ற கட்சிகளை இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று அவதூறு பரப்பி, மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். 10 ஆண்டு காலத்தில் பாஜக அரசு இந்துக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை இந்து பெரும்பான்மை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இனிமே பாஜக அரசு பரப்புகின்ற அவதூறுகள் பெரும்பான்மை இந்து சமூகத்தினரிடையே எடுபடாது, பாஜகவின் கனவு பலிக்காது என்று குறிப்பிட்டார்.
The post “இந்துக்களை வாக்கு வங்கியாக பார்க்கும் கட்சி பாஜக”: இந்தியா கூட்டணியை பிளவுப்படுத்த பாஜக தலைவர்கள் கங்கணம்.. திருமாவளவன் பேட்டி..!! appeared first on Dinakaran.